Showing posts with label ஒளவையின் மூதுரை - 30. Show all posts
Showing posts with label ஒளவையின் மூதுரை - 30. Show all posts

13.12.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 30


சாந்துணையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்துணையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

விளக்கம்.

மரமானது மக்கள் தன்னை அடியோடு வெட்டும் வரையிலும் வெயிலைத் தடுத்துக் குளிர்ந்த நிழலைத் தந்துதவும். (அதுபோல) அறிவுடைய நல்லோர்கள், பிறர் தமக்குக் கெடுதிகளையே செய்தாலும் சாகும் வரையிலும் தாங்கள் அக்கெடுதி செய்பவர்களைத் தங்களால் ஆனமட்டிலும் காப்பாற்றுவர்.

(கருத்து – அறிவுடைய நல்லோர், தங்களுக்குத் துன்பஞ் செய்பவர்களுக்கும் நன்மையே செய்வார்கள் என்பதாம்)


மூதுரை முற்றும்.