Showing posts with label ஒளவையின் மூதுரை - 28. Show all posts
Showing posts with label ஒளவையின் மூதுரை - 28. Show all posts

30.10.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 28



சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் – தந்தம்
தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.

விளக்கம்.

சந்தனமர கட்டையைத் தேய குறைபட்டாலும் அதன் வாசனையில் குறையாது. ஆகையால் மாலையணிந்த அரசர்கள் தங்கள் தங்களுடைய செல்வத்திலே குறைந்தவர்கள் ஆனாலும் மனத்தின் தன்மையிலே குறைந்தவர் ஆவார்களோ? (ஆகமாட்டார்)


(கருத்து – சிறந்தவர்கள் செல்வம் குறைந்தபோதும் மனத்தின் நல்ல தன்மையிற் குறைய மாட்டார்கள் என்பதாம்)