12.12.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 29



மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் – திருமடந்தை
ஆம்போ தவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம்.

விளக்கம்.

சேர்ந்துள்ள இன்பத்தைத் தரும்படியான உறவும் சிறந்த பொருள்களும் அழகிய வடிவமும் உயர்ந்த குடியும் மற்ற எல்லாப் பெருமைகளும் செல்வம் (இலட்சுமி) ஒருவனிடன் உள்ள போது அவளுடனே அனைத்தும் வந்து சேரும். அவள் போகும் போது அனைத்தும் அவளுடனே போகும்.


(கருத்து – செல்வம் ஒருவனிடத்தில் உள்ளவரை எல்லாச் சிறப்புகளும் பொருந்தி வரும். அது நீங்கினால் எல்லாம் போய்விடும் என்பதாம்)

No comments:

Post a Comment