5.7.13

ஔவையாரின் மூதுரை விளக்கம் – 7



நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்
தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகும் குணம்.

விளக்கம்.

நீரிலுள்ள அல்லியினது உயரம் நீரினது அளவிற்குச் சரியாகவே அமைந்திருக்கும். (அதுபோல) ஒருவனது கூர்மையான அறிவுவானது அவன் படித்த புத்தகங்களின் அளவுக்குச் சம்மாகவே அமைந்திருக்கும். அவன் அடைந்த செல்வம், அவன் முன்பிறப்பில் செய்த தவத்தினது அளவிற்குச் சம்மாக அமைந்திருக்கும். ஒருவனது குணமானது அவன் பிறந்த பரம்பரையின் நிலைமைக்குச் சம்மாகவே அமைந்திருக்கும். (அதாவது, ஒருவனுக்கு அறிவு படிப்பாலும், செல்வம் தவத்தாலும், குணம் குடும்பத்தாலும் அமைகிறதாம்)

No comments:

Post a Comment